அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவிகள்
வழங்குமாறு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள் அழைப்பு
ஏப்ரல்30,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டு தென் மாநிலங்களில் தொடர்ச்சியாகக் கடும் புயலால்
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குமாறு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள்
விண்ணப்பித்துள்ளன. இந்தப் புயல்கள், கடந்த சில நாட்களில் அந்தப் பகுதியில் வாழும்
முழு சமூகங்களையும் இடருக்கு உள்ளாக்கியிருக்கின்றன என்று கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின்
இடர்துடைப்புக்களுக்குப் பொறுப்பாளரான கிம் பூர்கோ கூறினார். உணவு, தண்ணீர், உறைவிடம்
போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுப்பதில் பிறரன்பு அமைப்புகள் முயற்சித்து வருகின்றன
என்றார் பூர்கோ. இந்தப் புயல்களில் சுமார் 300 பேர் இறந்துள்ளனர்.