நாம் எல்லாருமே ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – தென் கொரிய ஆயர் Lazzaro
ஏப்ரல்29,2011. இயற்கைப் பேரிடர்கள், உள்நாட்டுப் போர் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள்,
குடியேற்றதாரத் தொழிலாளர்கள், வடகொரியர்கள் என எல்லாருமே ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,
இவர்கள் எல்லாருமே நம்மோடு சேர்ந்து வாழ்கின்றவர்கள் என்று தென்கொரிய ஆயர் Lazzaro You
Heung-sik கூறினார். மே ஒன்றாந்தேதி தென் கொரியாவில் 97வது குடியேற்றதாரர் மற்றும்
அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவையின்
குடியேற்றதார ஆணையத் தலைவரான ஆயர் Lazzaro You Heung-sik, கொரியர்கள் அனைவரும் இயேசுவின்
அன்புக்கட்டளையைக் கடைபிடித்து வாழுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார் என்று கூறியுள்ளார். தென்
கொரியாவில் குடியேற்றதாரத் தொழிலாளர் மற்றும் குடியேற்றதாரப் பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள்
இருப்பதையும் ஆயர் குறிப்பிட்டுள்ளார். தென் கொரியத் திருச்சபையில் 2005ம் ஆண்டிலிருந்து
மே ஒன்றாந்தேதியன்று குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.