2011-04-27 16:40:30

இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்கைக் காண வரும் பல்லாயிரம் போலந்து நாட்டவர்கள்


ஏப்ரல் 27,2011. வருகிற ஞாயிறன்று இறையடியார் இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்கைக் காண பல்லாயிரம் போலந்து நாட்டவர்கள் இவ்வியாழனன்று தங்கள் பயணத்தை துவக்குகின்றனர். இவர்கள் மீண்டும் மே மாதம் 3ம் தேதி தங்கள் நாட்டுக்குத் திரும்புவர் என்றும் அந்த நாள் போலந்து நாட்டில் ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதென்றும் செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, மே மாதம் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் நடைபெறும் இத்திருச்சடங்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று மற்றொரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.
வருகிற ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும் இவ்வொளிபரப்பில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் ஆவணப் படமாகக் காட்டப்படும். மற்றும், திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலின் செயலராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்த கர்தினால் Stanislaw Dziwisz வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் Vincent Nichols ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் ஒளிபரப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.