2011-04-26 15:08:00

பான் கி மூன் : ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, மனக்கசப்பிலிருந்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புங்கள்


ஏப்ரல் 26,2011: “25 ஆண்டுகளுக்குப் பின்னர் செர்னோபில் : உறுதியான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் நியூயார்க்கில் இத்திங்களன்று திறக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலைய விபத்து குறித்த அருங்காட்சியக நிகழ்வுக்குச் செய்தி வழங்கினார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, “மனக்கசப்பிலிருந்து நம்பிக்கையைக்” கட்டி எழுப்புங்கள் என்று அச்செய்தியில் கூறியுள்ள பான் கி மூன், இதே மாதிரியான அழைப்பை இங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் முன்வைக்கின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
இந்தச் செர்னோபில் அணு உலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கென 2006ம் ஆண்டில் ஐ.நா.தொடங்கிய பத்தாண்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
நிர்வாகிகளின் கடும் பொறுப்பற்ற செயல் மற்றும் வடிவமைப்புக்களில் ஏற்பட்ட பெரும் தவறு காரணமாக இந்தச் செர்னோபில் அணுஉலை வெடித்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
‘செர்னோபையல் இன் ரஷ்யா ‘என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி கடந்த 2004ம் ஆண்டு வரை ஒன்பது இலட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த விபத்தால் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்று நோய்த் தாக்குதலால் இறந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.