2011-04-26 15:03:09

செயின்ட் லூயிஸ் பேராயர் : இறையழைத்தல்களை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது


ஏப்ரல் 26,2011: இவ்வாண்டு அனைத்துலக இறையழைத்தல் ஞாயிறுக்கானத் திருத்தந்தையின் செய்தி, குருத்துவ மற்றும் துறவு வாழ்க்கைக்கு அழைத்தல்களை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கக் குடும்பங்களின் முக்கியமான பங்கைச் சுட்டிக் காட்டுகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு செயின்ட் லூயிஸ் பேராயர் Robert Carlson கூறினார்.
இறையழைத்தல் கலாச்சாரத்தைத் தலத்திருச்சபை எவ்வாறு வளர்க்கிறது என்பதைச் சிந்திக்கவும் திருத்தந்தை அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் என்றும் பேராயர் இராபர்ட் கார்ல்சன் கூறினார்.
இவ்வாண்டு இறையழைத்தல் ஞாயிறு, தலத்திருச்சபையில் இறையழைத்தல்களை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் வருகிற மே மாதம் 15ம் தேதி கடைபிடிக்கப்படும். கத்தோலிக்கர் இறையழைத்தல்களில் கவனம் செலுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் 1964ம் ஆண்டு இவ்வுலக நாளை ஏற்படுத்தினார் திருத்தந்தை ஆறாம் பவுல்.








All the contents on this site are copyrighted ©.