அமெரிக்க ஆயர் ஹைமே : யூதஇன ஒழிப்புப் போன்றதோர் இருள் சூழ்ந்த தீமை வரலாற்றில் இனிமேல்
இடம் பெறவே கூடாது
ஏப்ரல் 26,2011: யூதஇன ஒழிப்புப் போன்றதோர் இருள் சூழ்ந்த தீமை வரலாற்றில் இனிமேல் ஒருபோதும்
இடம் பெறவே கூடாது என்ற நோக்கத்துடன் அந்த அழிப்பு நடவடிக்கை கட்டாயமாக நினைவுகூரப்பட
வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர், அந்நட்டின் முக்கிய யூதமதக் குருவுக்கு
எழுதியுள்ள கடிதம் கூறுகின்றது. 1943ம் ஆண்டில் போலந்து நாட்டு வார்சாவில் யூதர்கள்
வாழ்ந்த பகுதியில் இடம் பெற்ற வன்செயலை, யூதஇன ஒழிப்பு நினைவு நாளாக அமெரிக்க யூதர்கள்
கடைபிடிக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு இந்நாளுக்கு முந்தைய ஞாயிறன்று இதனைக்
கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு இத்தினம் மே மாதம் முதல் தேதியன்று தொடங்கி எட்டு நாட்கள்
வரை இடம் பெறுகிறது. ஆயினும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் சனவரி 27ம் தேதி இந்நாளைக் கடைபிடிக்கிறது.
இந்நாளில் யூதஇன ஒழிப்பு நடவடிக்கைக்குப் பலியானோரை நினைவுகூருவது மட்டுமல்ல, இத்தகைய
இனப்படுகொலைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களைத் தவிர்ப்பதற்கு விழிப்புடன் இருக்கவும் இத்தினம்
தூண்டுகின்றது என்று ஆயர் Jaime Soto, யூதமத ராபி Reuven Taff வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருக்கிறார்.