2011-04-25 14:48:21

மணிப்பூர் மாநிலத்தின் சிறுபான்மையினர்க்கான அவையில் கிறிஸ்தவப் பிரதிநிதி நியமனம்.


ஏப்ரல் 25, 2011. மணிப்பூர் மாநிலத்தின் சிறுபான்மையினர்க்கான அவையில் கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அகில இந்திய கிறிஸ்தவர் அமைப்பு தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
மூன்றாண்டிற்கு கிறிஸ்தவ குரு திபேந்திர சிங்கை மணிப்பூரின் சிறுபான்மையினருக்கான அவையின் கிறிஸ்தவப் பிரதிநிதியாக அரசு நியமித்துள்ளது, கிறிஸ்தவர்களை தாக்குதலிலிருந்து பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளதாக தெரிவித்தனர் அகில இந்திய கிறிஸ்தவ அமைப்பின் அதிகாரிகள்.
அண்மைக் காலங்களில் மணிப்பூரில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வந்துள்ளது குறித்துக் கவலையை வெளியிட்ட அகில இந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச்செயலர் ஜான் தயாள், கிறிஸ்தவப் பிரதிநிதிக்கான தேவை குறித்த விண்ணப்பம் கடந்த செப்டம்பரிலேயே மணிப்பூர் தலைமைச் செயலரிடம் முன்வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.