சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார் என்ற குற்றச்சாட்டை
மறுத்துள்ளார் பேராயர் பார்வா
ஏப்ரல்25,2011. சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களை இந்து மதத்திலிருந்து
தான் மதம் மாற்றியதாக இந்து தீவிரவாத அமைப்புத் தலைவர் பிரவீன் டோகாடியா கூறியுள்ள குற்றச்சாட்டை
மறுத்துள்ளார் கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட புதிய பேராயர் ஜான் பார்வா. விஸ்வ
இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேசப் பொதுச் செயலரான பிரவீன் பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர்
என்றுரைத்த ஒரிசா பேராயர் பார்வா, இத்தகையக் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை மற்றும்
இவை வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். டோகாடியாதான், ரூர்கேலா மறைமாவட்டத்தில்
சில கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றியுள்ளார் என்ற பேராயர் பார்வா, டோகாடியா போன்ற
ஆட்களால் திருச்சபை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்றார். இந்தியாவில்
மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ள சுமார் ஆறு மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று.