2011-04-25 14:41:48

சிறார் எதிர்நோக்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் திருத்தந்தை ஆதரவு


ஏப்ரல்25,2011. சிறாரைப் பாதிக்கும் இழிபொருள் இலக்கியங்கள் மற்றும் சிறார் எதிர்நோக்கும் வன்முறைகள், பாராமுகம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைத் தான் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வன்முறைக்குப் பலியாகும் சிறார்க்கு ஆதரவான தேசிய தினம் இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு இத்திங்கள் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இதில் கலந்து கொண்ட “Meter” என்ற கழகத்தினரின் முயற்சிகளுக்குத் தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.
இந்தக் கழகமானது வன்முறைக்குப் பலியாகும் சிறார்க்கு ஆதரவாக உழைத்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.