2011-04-20 15:07:22

திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் முத்திப்பேறு பெற்ற நிலையையொட்டி வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வை நேரங்கள் அதிகரிப்பு


ஏப்ரல்20,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருப்பதையொட்டி இந்த ஏப்ரல் 26,27,28,29 மற்றும் மே 2 ஆகிய நாட்களில் வத்திக்கான் அருங்காட்சியகம் இரவிலும் பயணிகளுக்குத் திறந்து விடப்படும் என்று திருப்பீடம் அறிவித்தது.
இந்நாட்களில் வத்திக்கான் அருங்காட்சியகம் மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு வரைத் திறந்திருக்கும் என்றும் அங்கு நுழைவதற்கு இரவு பத்து மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பீடம் கூறியது.
மேலும், பங்குத்தந்தை, மறைமாவட்டம் அல்லது துறவற சபையிலிருந்து கடிதத்துடன் செல்பவர்களுக்கு நுழைவுக் கட்டணம் எட்டு யூரோக்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இன்னும், ஆகஸ்ட் மாதம் தவிர, வருகிற மே 6ம் தேதியிலிருந்து அக்டோபர் 28ம் தேதி வரை வத்திக்கான் அருங்காட்சியகம் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.