இந்திய உச்சநீதி மன்றம் கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை
ஏப்ரல்20,2011. இந்தியாவில் இடம் பெறும் கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதில் மாநில
அரசுகள் கடுமையாக நடந்து கொள்ளுமாறு உச்சநீதி மன்றம் கேட்டுள்ளது. கவுரவக் கொலைக்
குற்றங்களைச் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் மூத்த அதிகாரிகள் விசாரணைக்கு
உட்படுத்தப்படுவார்கள் என்றும் உச்சநீதி மன்றம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் குடும்பங்களின்
பாரம்பரியத்தைக் காக்கத் தவறுகிறார்கள் என்று சொல்லி அண்மைக் காலங்களில் மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர்
மற்றும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் நடக்கும் “கட்டப் பஞ்சாயத்துக்கள்”, வட
இந்தியாவில் நடக்கும் “காப் பஞ்சாயத்துக்கள்” முறைகளையும் இந்திய உச்சநீதி மன்றம் வன்மையாய்க்
கண்டித்துள்ளது.