2011-04-18 14:20:34

கொலம்பியாவில் வன்முறை முடிவுக்கு வர திருத்தந்தை வேண்டுகோள்


ஏப்ரல் 18, 2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வன்முறை முடிவுக்கு வரவும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, அந்நாட்டில் புனித வெள்ளியன்று வன்முறையில் பலியானவர்களுக்காகச் செபிக்கும் மக்களுக்கானத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கொலம்பிய ஆயர் பேரவை எடுத்துள்ள இந்த நல்ல முயற்சியில் பலர் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.
கொலம்பியாவில் புனித வெள்ளியை வன்முறையில் பலியானவர்களுக்காகச் செபிக்கும் நாளாக அர்ப்பணித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
இது குறித்துப் பேசிய ஆயர் பேரவை பொதுச் செயலர் ஆயர் ஹூவான் விசென்த்தே கோர்தோபா, கொலம்பியாவின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் வன்முறை பல்வேறு முறைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.








All the contents on this site are copyrighted ©.