26வது உலகக் கத்தோலிக்க இளையோர் நாளுக்கான மெய்ப்புப் பணி வழிகாட்டுதல் நூல் அறிமுகம்
ஏப்ரல் 13, 2011. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 16 முதல் 21ம் தேதி வரை இஸ்பெயினின் மத்ரித்
நகரில் இடம்பெறும் 26வது உலகக் கத்தோலிக்க இளையோர் நாளுக்கான மெய்ப்புப் பணி வழிகாட்டுதல்
நூல் திருப்பீடப் பத்திரிகைத் துறை அலுவலகத்தில் இப்புதனன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ‘YouCat’
என்று அழைக்கப்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் இளையோருக்கான மறைக்கல்வி ஏடு மத்ரித்தில்
பங்கு பெறும் ஒவ்வோர் இளையோருக்கும் வழங்கப்படும் நோக்கில் 7 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாக,
பொது நிலையினருக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko செய்தியாளர்கள்
கூட்டத்தில் இப்புதனன்று அறிவித்தார்.திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கொடையாக இளையோருக்கு
வழங்கப்படவுள்ள இவ்வழிகாட்டுதல் ஏடு இவ்வுலக கத்தோலிக்க இளையோர் நாட்களில் பயன்படுத்தப்படவுள்ள
ஆறு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.