2011-04-09 14:45:23

பிரேசிலில் பள்ளிச் சிறார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துத் திருத்தந்தை ஆழ்ந்த வருத்தம்


ஏப்ரல்09,2011 மேலும், பிரேசில் நாட்டு ரியோ தெ ஜெனெய்ரோவில் பள்ளி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, ரியோ தெ ஜெனெய்ரோ பேராயர் Orani João Tempesta வுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் தங்களையே பாதுகாத்துக் கொள்ள இயலா நிலையிலிருக்கும் இந்தப் பள்ளிச் சிறாரின் இழப்பால் வருந்தும் அவர்களின் குடும்பங்களுக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் திருத்தந்தையின் செபத்துடன்கூடிய ஒருமைப்பாட்டுணர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ தெ ஜெனெய்ரோ நகரசபை பள்ளி ஒன்றில் அப்பள்ளியின் பழைய மாணவர் Wellington Menezes de Oliveira என்பவர் இவ்வியாழன் காலை சென்று தான் மாணவர்களுடன் ஒரு கருத்தரங்கு குறித்துப் பேச வேண்டியிருக்கிறது என்று பள்ளி அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அப்பள்ளியின் மூன்றாவது மாடிக்குச் சென்று சரமாரியாகச் சுட்டார். இதில் 12 மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இந்தப் பழைய மாணவர் வாழ்க்கை எந்தவிதப் பற்றும் இல்லாதவர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகின்றது.
திருத்தந்தையின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள செய்தியில், மக்கள் வன்முறையைப் புறக்கணித்து நீதி மற்றும் ஒருவர் ஒருவரை மதிக்கும், குறிப்பாக நலிந்தவர்களை மதிக்கும் பண்புகள் மீது சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரியோ தெ ஜெனெய்ரோ பேராயர் Orani João Tempesta வும் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.