ஏப்ரல்09,2011. இணையதளத்தில் தங்களது படைப்புக்களை வெளியிடும் bloggers களுடன் உறவுகளை
வளர்த்துக் கொள்வதற்கும் அவர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்குமென வருகிற மே 2ம்
தேதி உரோமையில் வத்திக்கான் சர்வதேச கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறையடியார்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்படும் மே ஒன்றாந்தேதி நிகழ்ச்சிக்கு
Blogger கள் பெருமளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு அடுத்த நாள்
அவர்களுடன் கூட்டத்தை நடத்துவதற்கு வத்திக்கான் திட்டமிட்டுள்ளது. திருப்பீட கலாச்சார
அவையும் சமூகத் தொடர்பு அவையும் இணைந்து இக்கூட்டத்தை நடத்துகின்றன. இக்கூட்டத்தில்
யாரும் பங்கெடுக்கலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் என்ற மின்னஞ்சலுக்கு எழுதி
பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். அக்கூட்டத்தின் நிகழ்ச்சிகள், இத்தாலியம், ஆங்கிலம்,
ப்ரெஞ்ச், போலந்து, ஸ்பானியம் ஆகிய மொழிகளில் உடனுக்குடன் வழங்கப்படும். மொத்தம் 150
பேர் கலந்து கொள்வதற்கென வசதிகள் செய்யப்பட்டுள்ளன.