2011-04-08 15:57:48

லிபியாவை விட்டு வெளியேறிய சுமார் 250 குடியேற்றதாரர்களின் இறப்பு குறித்து திருத்தந்தை கவலை


ஏப்ரல்08,2011. மேலும், வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் வன்முறைகளுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 250 குடியேற்றதாரர்கள் பரிதாபமாக இறந்துள்ளது குறித்து திருத்தந்தை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
லிபியாவில் இடம் பெறும் சண்டைக்குப் பயந்து இத்தாலிக்குத் தப்பி வந்த சுமார் 300 பேர் பயணம் செய்தப் படகு இப்புதன் காலை கவிழ்ந்ததில் சுமார் 250 பேர் இறந்தனர்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, அண்மைக் காலங்களாக இடம் பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் குடியேற்றதாரர் குறித்த கவலைதரும் விடயங்களைத் திருத்தந்தை கேட்டு வருகிறார் என்றார்.
லிபியாவின் வன்முறைகளுக்குப் பயந்து வெளியேறிய குடியேற்றதாரர்களில் சுமார் 22 ஆயிரம் பேர் கடந்த வாரத்தில் இத்தாலிக்கு வந்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.