2011-04-05 15:29:37

பீகாரில் இறந்த நிலையில் சிசுக்கள் கண்டுபிடிப்பு


ஏப்ரல் 05,2011. பீகாரில் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில், ரசாயனம் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஜாடிகளில் அடைக்கப்பட்டு, இறந்த நிலையில், 15 சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள்.
இது குறித்துப் பேசிய கிஷன்கஞ்ச் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.கே. மிஷ்ரா, "ஒரு தனியார் மருத்துவமனை அருகே பிளாஸ்டிக் ஜாடிகளில் அடைக்கப்பட்டிருந்த சிசுக்களின் வயது 4 முதல் 6 மாதங்களுக்குள் இருக்கும். அனைத்தும் வேதியப் பொருட்கள் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருந்தன. சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து விசாரணை துவக்கியுள்ளோம்' என்றார்.
இதே போல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், வேதியப் பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஜாடிகளில் 16 சிசுக்கள் இறந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள பாபுநகரில், 12 சிசுக்கள், தெரு நாய்கள் பாதி சாப்பிட்ட நிலையில் சிதறி கிடந்தன. இவற்றில் 7 ஆண் மற்றும் 5 பெண் சிசுக்கள்.








All the contents on this site are copyrighted ©.