2011-04-02 14:48:52

கத்தோலிக்க, யூதமதத் தலைவர்கள் செபத்தின் முக்கியத்துவத்திற்கு அழுத்தம்


ஏப்.02,2011. உலகில் கடவுளின் பிரசன்னத்திற்குச் சான்று பகர்வதற்குச் செபம் இன்றியமையாதது என்று கத்தோலிக்க மற்றும் யூதமதத் தலைவர்கள் கூறினர்.
இஸ்ரேல் யூதமதத் தலைமைக் குருவின் பிரதிநிதிகள் மற்றும் யூதர்களுடனானத் திருப்பீடக் குழுவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு எருசலேமில் இவ்வியாழனன்று நிறைவு செய்த மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த நவீன உலகம், வாழ்க்கை மீது அர்த்தமும் நோக்கமுமின்றி வாழ்கின்றது, இத்தகைய உலகுக்கு விசுவாசமும் மதத்தவரின் தலமைத்துவமும் முக்கிய பங்காற்ற வேண்டுமெனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் இறைவனின் பிரசன்னத்திற்கு விசுவாசிகள் சாட்சிகளாக வாழுமாறும் அவ்வறிக்கைப் பரிந்துரைக்கிறது







All the contents on this site are copyrighted ©.