2011-04-01 16:23:00

ஐ.நா. அறிக்கை : உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையிலே வாழச் செய்துள்ளது


ஏப்.01,2011: உலகில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சென்ற ஆண்டில் தங்கள் வறுமையிலிருந்து வெளிவருவதற்குத் தடையாய் இருந்ததென்று ஐ.நா.வின் புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
உணவு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் இந்த 2011ம் ஆண்டிலும் அம்மக்களை வறுமையிலே வைக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், நேபாளம் போன்ற நாடுகளில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கான ஐ.நா.வின் மில்லென்ய இலக்கு நிறைவேறுவதற்கு இந்த விலைவாசி உயர்வுத் தடங்கலாக இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்த விலை உயர்வுகளால் மேலும் ஒரு கோடி முதல் நான்கு கோடியே இருபது இலட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.