2011-03-30 15:38:11

அணு உலை கதிர்வீச்சு சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளது


மார்ச் 30,2011. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை கதிர்வீச்சு சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புக்குஷிமா அணு உலை வெடித்தது. அதில் இருந்து பரவத் தொடங்கிய கதிர்வீச்சினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் வெளியேறும் கதிர் வீச்சு ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவிலும் பரவியது.
தென்கொரியாவை தொடர்ந்து, தற்போது சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அணுக் கதிர்வீச்சு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.