2011-03-26 15:22:03

பாகிஸ்தான் ஆயர்கள் : Shahbaz Bhatti மறைசாட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை முன்வைக்கத் திட்டம்


மார்ச்26,2011: பாகிஸ்தானில் அண்மையில் கொலை செய்யப்பட்ட சிறுபான்மைத்துறை அமைச்சர் Shahbaz Bhattiயை மறைசாட்சியாக அறிவிப்பதற்குப் பாகிஸ்தான் ஆயர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
இத்தகையப் பரிந்துரையை வத்திக்கானுக்கு முன்வைப்பதற்கான முன்வரைவுத் தொகுப்பைத் தயாரித்த முல்டான் ஆயர் ஆண்ட்ரு பிரான்சிஸ், Shahbaz Bhatti, இயேசு கிறிஸ்து மீது அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததால் தனது வாழ்வையே அளித்தார் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆயர்கள் லாகூரில் நடத்தி வரும் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறுபான்மை மதங்களின் அமைச்சா Shahbaz Bhatti இம்மாதம் 2ம் தேதி இசுலாமாபாத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்காகத் தனது தாயின் வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராக இருந்த Shahbaz Bhatti, சமய சுதந்திரம் மற்றும் அமைதிக்காகக் குரல் எழுப்பியவர்.







All the contents on this site are copyrighted ©.