தேர்தலை முன்னிட்டு, கேரள கத்தோலிக்கர்களின் ஆதரவைக் கோரும் இடதுசாரி
கட்சித் தலைவர்கள்
மார்ச் 23,2011. வருகிற ஏப்ரல் மாதம் கேரளாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு,
அங்குள்ள இடதுசாரி கட்சித் தலைவர்கள் கத்தோலிக்கர்களின் ஆதரவைக் கோரி, கத்தோலிக்கத் திருச்சபையின்
தலைவர்களைச் சந்தித்தனர். இந்திய கம்யுனிசக் கழகத்தின் கேரள மாநிலத் தலைவர்கள் திரிச்சூர்
பேராயர் Mar Andrews Thazhathஐ இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினர் என்று UCAN செய்தி
கூறுகிறது. இச்சந்திப்பு நட்பின் அடிப்படையில் நிகழ்ந்ததேயொழிய வேறு எந்த அரசியல்
நோக்கமும் இல்லை என்று கம்யுனிசக் கழக கேரளச் செயலர் சந்திரப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். அதேபோல்,
கண்ணூரில் ஆயர் வர்கீஸ் சக்கலக்கல்லை மார்க்சிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சந்தித்துப்
பேசியுள்ளார்.எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிப்பது திருச்சபையின் பணி அல்ல,
ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சியின்படி வாக்களிக்கவே திருச்சபை மக்களிடம் கூறி வருகிறதென்று
ஆயர் சக்கலக்கல் கூறினார்.