ஜப்பானின் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10இலட்சம் ரூபாயை உதவியாக வழங்குகிறது
பெங்களூரு உயர்மறைமாவட்டம்.
மார்ச் 21, 2011. ஜப்பானின் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவுவதற்கென 10இலட்சம் ரூபாயை கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது பெங்களூரு உயர்மறைமாவட்டம். இந்த
இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட பல்வேறு சமூக
மக்கள் கூடிய கூட்டத்தில் இவ்வறிவிப்பு விடப்பட்டது. பெங்களூரு பேராயர் பெர்னார்டு
மொராசுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் கிளைத்தூதரகப்பிரிவு அதிகாரிகள் ஷாலினி
வாலியாவும் பிராத்திமா சர்காரும், இந்திய மக்களின் இந்த ஒருமைப்பாட்டுணர்வுக்கு தங்கள்
நன்றியை வெளியிட்டனர். இவ்வுலகில் நில நடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கு
வழி கோலும் தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்த கவலையும் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.