2011-03-21 15:26:57

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் பிரார்த்தனை


மார்ச் 21, 2011. அந்தோணியார் ஆலய விழாவைச் சிறப்பிக்க கச்சத்தீவில் கூடிய இந்திய மற்றும் இலங்கை விசுவாசிகள், இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் கலந்து கொண்டு, இந்திய - இலங்கை ஒற்றுமை, உலக அமைதி, சுனாமியில் பாதித்த ஜப்பான் நாடு ஆகியவற்றிற்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
'இந்திய மக்களுக்கான நலம்புரி சேவைகள்' என்ற பெயரில் தற்காலிக முகாம் அமைத்திருந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக பக்தர்களுக்கு ஞாயிறு காலை சாப்பாடு, பிஸ்கட் பாக்கெட், வாழைப்பழம், மாம்பழச்சாறு, ஐஸ்கிரீம், தண்ணீர் பாட்டில்களை வழங்கியதாகவும், தீவை சுற்றிப் பார்ப்பதற்கும் அனுமதி வழங்கியதாகவும் அங்கு சென்று திரும்பியோர் அறிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.