ஒவ்வொரு மறைமாவட்டமும் இறையழைத்தலுக்காகச் செபிக்கக் குருக்கள் பேராயத் தலைவர் வேண்டுகோள்
மார்ச்18,2011. திருச்சபையில் இறையழைத்தல் அதிகரிக்கவும் அருட்பணியாளர்களின் புனித வாழ்வுக்காகவுமென
ஒவ்வொரு மறைமாவட்டமும் ஆராதனைச் சிற்றாலயம் அல்லது ஒரு திருத்தலத்தை அர்ப்பணிக்குமாறு
குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Mauro Piacenza கேட்டுக் கொண்டார். பிரான்ஸ்
நாட்டு துலோன் ஆயர் Dominique Rey திருநற்கருணை ஆராதனை குறித்த அனைத்துல மாநாட்டை வருகிற
ஜூன் 20 முதல் 24 வரை உரோம் சலேசிய பல்கலைகழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதனையொட்டி
ஆயர் ரேய்க்குக் கடிதம் எழுதிய கர்தினால் Piacenza, திருநற்கருணை ஆராதனையின் மதிப்பை
விளக்கியுள்ளார். திருநற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் நம் ஆண்டவரை வணங்குவதன்
முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறாமல் இருக்க முடியாது என்றுரைத்த அவர், வழிபாடு,
இறைமக்களின் மிக உன்னதச் செயலாக இருக்கின்றது எனவும் கூறினார்.