மார்ச்15,2011: ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்
கானடா நாட்டு மறைபோதகர் அருட்திரு Andre Lachapelle, சென்டைய் நகரில் இறந்துள்ளார். கானடா
நாட்டு கியூபெக் வெளிநாட்டு மறைபோதகக் சபையைச் சேர்ந்த 76 வயதாகும் அருட்திரு Andre Lachapelle,
33 அடி உயரத்தில் சீறிவந்த சுனாமி அலையில் அதிர்ச்சியடைந்து இறந்துள்ளார் என்று சென்டைய்
மறைமாவட்ட சான்சிலர் அருட்திரு Peter Shiro Komatsu கூறினார். மேலும், இந்த நிலநடுக்கத்தால்
அந்நாட்டின் ஃபுக்குஷிமா அணுமின் நிலைய அணுஉலை எண் ஒன்று மற்றும் எண் மூன்று ஏற்கனவே
வெடித்துள்ளவேளை, இச்செவ்வாய் காலை அணுஉலை எண் இரண்டும் எண் நான்கும் தீப்பற்றியதாகச்
செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த அணுக் கதிர்வீச்சுக்கள், மணிக்கு 400 millisievert
என்ற விகிதத்தில் உள்ளன இவை முந்தைய நாளைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கின்றன.. இதனால்
இதனைக் குறைப்பதற்கானப் பணிகளில் உதவி செய்வதில் ஐ.நா.வின் IAEA என்ற அணுசக்தி கட்டுப்பாட்டு
அமைப்பும் அமெரிக்க ஐக்கிய நாடும் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுவாக கதிர்வீச்சின்
தாக்கம் ஆயிரம் millisieverts இருந்தால் மூச்சுத்திணறல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.
5,000 millisieverts வந்தால் இதனால் தாக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினர் இறக்கக்கூடும்
என்று உலக அணுக்கழகம் கூறுகிறது.