2011-03-12 15:15:25

மார்ச் 19ல் பூமிக்கு அருகே சந்திரன்


மார்ச் 12,2011: பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இம்மாதம் 19ம் தேதி 3,56,577 கி.மீ., தூரத்தில் வருகிறது எனச் சொல்லப்பட்டுள்ளது.
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரி தூரம் சுமார் 3,84,440 கி.மீட்டராகும்.
ஆயினும் இந்த மார்ச் 19ம் தேதி பௌணர்மியாக இருப்பதோடு 3,56,577 கி.மீ., தூரத்தில் வருகிறது, இது கடந்த 18 ஆண்டுகளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் தூரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் 1993ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முழுநிலவு தினத்தன்று சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வந்தது என்று பிர்லா பிளானெட்டோரியம் இயக்குனர் டி.பி.துரை அறிவித்தார்.
எப்போதெல்லாம் பூமிக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகில் சந்திரன் இம்முறை வருவதற்கு, "சூப்பர் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாகக் காணப்படும். கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோரச் சம்பவங்கள் நடந்துள்ளன. 1974ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப்போட்டது.








All the contents on this site are copyrighted ©.