சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் ஆயர் பேரவை உதவி
மார்ச் 12,2011: ஜப்பான் ஆயர் பேரவை அலுவலகம் இரவு பகல் பாராமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவி வருகின்றது என்று அந்த அலுவலகப் பணியாளர்கள் ஆசிய செய்தி நிறுவனத்திடம்
அறிவித்தனர். இப்பேரிடர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான்
கி மூன், ஜப்பானைப் பற்றி வெளிவரும் புகைப்படங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி
இருப்பதாகத் தெரிவித்தார். இப்பேரிடர் இடர்துடைப்புப் பணியில் ஐ.நா. தன்னால் இயன்ற
அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்யும் என்றும் பான் கி மூன் உறுதியளித்துள்ளார். புகுஷிமாவில்
அணுமின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இங்குள்ள 5அணு
உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது.
அணுக்கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை. இருப்பினும் 10 கி.மீட்டர்
வரை வாழ்வோர் இடத்தைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அணு மைய அதிகாரிகள்
கூறுகின்றனர். இந்தப்பகுதியில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.