2011-03-08 16:12:19

வத்திக்கான் உயர் அதிகாரி : சமய வெறுப்புணர்வையொட்டிக் கொல்லப்படும் மக்களில் 75 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்


மார்ச்08,2011. உலகில் சமயக் காழ்ப்புணர்வையொட்டிக் கொல்லப்படும் மக்களில் ஒவ்வொரு நூறு பேருக்கும் 75 பேர் கிறிஸ்தவர்கள் என்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
சமய சுதந்திரம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 16வது அமர்வில் உரையாற்றிய பேராயர் தொமாசி, சமய சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகளுக்கு மையமாக இருக்கின்றது என்றார்.
சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு மீறப்பட்டு வருகின்றன என்பதை உலகில் அதிகரித்து வரும் பாகுபாடுகள் மற்றும் வன்முறைச் செயல்கள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.