2011-03-07 15:40:17

நேபாள கோவில் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.


மார்ச் 07, 2011. நேபாள தலைநகரின் விண்ணேற்பு மாதா கோவிலில் மேலும் வெடிகுண்டுகள் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடிய காவல்துறையினர் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி ஒன்றை கடந்த வாரத்தில் முறியடித்துள்ளனர்.
2009ம் வருடம் காத்மண்டுவின் விண்ணேற்பு மாதா கோவிலை வெடிகுண்டு வைத்து தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் மைனாலி என்பவரோடு தொடர்புடைய 6 பேரைக் கைது செய்துள்ளது நேபாளக் காவல்துறை.
NDA எனும் தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த ஐந்து பேரிடமிருந்து மூன்று வெடிகுண்டுகளும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இம்முறை இவர்களின் நோக்கம் கிறிஸ்தவர்கள் அல்ல, மாறாக மக்கள் கூடுமிடங்களைத் தாக்கி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது நோக்கமாக இருக்கலாம் என்கிறது காவல்துறை.
NDA என்ற இந்த அமைப்பே 2008 ஜூன் மாதம் நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் சலேசிய சபை குரு ஜான் பிரகாஷை கொலை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.