2011-03-05 14:22:43

லிபியாவில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு இயேசு சபையினர் அழைப்பு


மார்ச்05,2011. லிபியாவில் இடம் பெறும் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கும் அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் சர்வதேச சமுதாயம் உடனடியாகச் செயல்படுமாறு மால்ட்டாவிலுள்ள விசுவாசம் மற்றும் நீதிக்கான இயேசு சபை மையம் அழைப்பு விடுத்துள்ளது.
இயேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்ற போது சீமோன் என்ற நவீனகால லிபியாவிலிருந்து ஒரு மனிதர் அவருக்கு உதவி செய்வதற்கு உரோமைப் படைவீரர்களால் கட்டளையிடப்பட்டார் என்று கூறும் இந்த இயேசு சபை மையத்தின் அறிக்கை, இன்று லிபியாவில் மக்களின் கல்வாரித் துன்பத்தைக் காண முடிகின்றது என்று கூறுகிறது.
இதற்கிடையே, லிபியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கத்தோலிக்கக் காரித்தாஸ் குழுக்கள் உதவி செய்து வருகின்றன.
ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த குடியேற்றதாரர்கள் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு அதன் எல்லைகளில் இரண்டு முதல் ஆறு நாள்கள் வரைக் காத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.