I இணைச்சட்டம் (உபாகமம்) 11: 18,26-28,32 IIஉரோமையருக்கு
எழுதிய திருமுகம் 3: 21-25அ,28
மத்தேயு நற்செய்தி 7:
21-27 அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “என்னை
நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம்
விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி
செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே,
ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?
உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல
செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை
எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று
போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன். “ஆகவே,
நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது
தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து
ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும்
அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும்
இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய
அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது;
பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது
விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”