சாம்பல் புதன் பவனியை திருத்தந்தை வழிநடத்திச் செல்வார்
மார்ச்05,2011. பாரம்பரியாக இடம் பெற்று வரும் சாம்பல் புதன் பவனியை திருத்தந்தை 16ம்
பெனடிக்ட், உரோம் Aventine குன்றிலுள்ள புனித Anselm ஆலயத்திலிருந்து புனித சபினா பசிலிக்காவுக்கு
வழிநடத்திச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவக்காலம் தொடங்கும் சாம்பல் புதனான,
மார்ச் 9, வருகின்ற புதன் மாலை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு இந்தப் பவனி தொடங்கும். தபத்துடன்
நடைபெறும் இப்பவனியில் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், புனித ஆன்செல்ம் ஆசீர்வாதப்பர்
சபைத் துறவிகள், புனித சபினா பசிலிக்காவிலுள்ள தொமினிக்கன் குருக்கள் மற்றும் பொதுநிலை
விசுவாசிகள் கலந்து கொள்வார்கள். இதைத் தொடர்ந்து புனித சபினா பசிலிக்காவில் திருத்தந்தை
திருப்பலியும் நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது