மார்ச்03,2011. அன்பர்களே, சுமார் 27 வருடங்கள் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்திய
இறையடியார் திருத்தந்தை 2ம் ஜான் பால் வருகிற மே ஒன்றாந்தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு
உயர்த்தப்படவிருக்கிறார். இத்திருத்தந்தை 1986ம் ஆண்டு இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன்
25ம் ஆண்டு, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் 10ம் தேதி வரை இந்தியாவின்
முக்கிய நகரங்களில் சிறப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின்
சமூகப் படிப்பினைகளைப் புத்தகமாக வெளியிட்டார் அ.பணி சார்லஸ் இருதயம். இந்த இவரது முயற்சி
பற்றித் தொலைபேசி வழியாகக் கேட்டோம். அ.பணி சார்லஸ் இருதயம் இந்திய ஆயர் பேரவையின் நீதி,
அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் செயலர்.