ஐ.நா.வின் உலக உணவு திட்டக்குழுவின் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு
மார்ச் 03,2011. இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பிறகு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் WFP
எனப்படும் ஐ.நா.வின் உலக உணவு திட்டக்குழுவின் தலைவரான Josette Sheeran ஐ வத்திக்கானில்
தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். ஐ.நா.அதிகாரியான Josette Sheeran லிபியாவின்
எல்லைப்பகுதிகளுக்கு அண்மையில் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளார். இச்சந்திப்பின்
முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய Sheeran, லிபியாவின் தற்போதைய துன்பகரமான நெருக்கடியில்
சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதைக் காண முடிந்ததென்று
கூறினார். உலகின் பல பகுதிகளில் உணவின்றி வாடும் அனைத்து மக்களுக்கும் திருச்சபை ஆற்றி
வரும் எண்ணற்ற உதவிகளையும் ஐ.நா.அதிகாரியான Josette Sheeran எடுத்துரைத்தார்.