பிலிப்பீன்ஸில் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குறித்த அருங்காட்சியகம்.
பிப் 28, 2011. முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குறித்த அருங்காட்சியகம் ஒன்று
பிலிப்பீன்ஸின் Bacolod மறைமாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. மேல்மாடியில் மீனவர்களுக்கு
வழிகாட்டும் கலங்கரை விளக்கைக் கொண்டதாய் கட்டப்பட்டுள்ள இந்த ஏழு மாடி அருங்காட்சியகம்,
மீனவர்களுக்கான கடல் வழிகாட்டியாகவும் விசுவாசிகளுக்கான திருப்பயணத்தில் ஆன்மீக வழிகாட்டியாகவும்
இருக்கும் என்றார் புனித செபஸ்தியார் பேராலய முதல்வர் குரு ஃபெலிக்ஸ் பாஸ்க்யின். 30
ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இப்பகுதியில் திருப்பயணம் மேற்கொண்டதை
நினைவுகூரும் விதமாகவும், மேமாதம் முதல் தேதி இந்த திருத்தந்தை முத்திப்பேறு பெற்றவராக
அறிவிக்கப்பட உள்ளதைச் சிறப்பிக்கும் விதமாகவும் இந்த அருங்காட்சியகம் கட்டப்ப்டுள்ளதாகத்
தெரிவித்தார் குரு பாஸ்க்யின்.