பிப் 28, 2011. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் Jerzy Buzek, இத்திங்களன்று காலை
திருத்தந்தை 16ம் பெனடிக்டையும், பின்னர் திருப்பீடச்செயலர் மற்றும் நாடுகளுடன் ஆன திருப்பீடத்தின்
உறவுகளுக்கானச் செயலரையும் சந்தித்து உரையாடினார். இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற
இச்சந்திப்பின்போது திருப்பீடத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும், ஏனைய ஐரோப்பிய
நிறுவனங்களுக்கும் இடையேயான நல்லுறவுகள் குறித்தும் ஐரோப்பிய ஐக்கிய அவைக்குத் திருச்சபை
வழங்க இயலும் பங்களிப்பு குறித்தும் சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக திருப்பீடப்
பத்திரிகைத்துறை தெரிவிக்கிறது. மத சுதந்திரம் மதிக்கப்படவேண்டியதன் தேவை மற்றும்
உலகில் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களின் இன்றைய நிலைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது
விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.