இலங்கையில் மூன்று கிறிஸ்தவக் குருக்கள் இராணுவ துணைகுழு ஒன்றால் கடத்தப்பட்டுள்ளனர்
பிப் 28, 2011. இலங்கையின் பட்டிகோலாப் பகுதியில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த
மூன்று கிறிஸ்தவக் குருக்கள் இராணுவத் துணைக்குழு ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக
அக்குருக்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். கிழக்கு மாநில முதல்வர் பிள்ளையானின்
குழுவைச் சேர்ந்த ஓர் அங்கத்தினாரால் ஒரு கூட்டத்திற்கென அழைக்கப்பட்ட இம்மூவரும் தற்போது
எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவசபைக்
குருக்களான கணேசமூர்த்தி, சிவகுமார் யோனாத், சிவானந்தன் லூப் ஆகிய மூவரும் முதல்வர் பிள்ளையானுடன்
ஆன சந்திப்பிற்குப்பின் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை வெள்ளப்பெருக்கால்
பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எவ்வித மதபாகுபாடும் இன்றி பணியாற்றி வந்த இக்குருக்கள்,
இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவால் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் சில உறுதிச்செய்யப்படாத
தகவல்கள் தெரிவிக்கின்றன.