பிப்.26,2011. கருக்கலைப்பை அனுமதிக்கும் எந்த ஒரு சட்டமும் அநீதியானது, அது சட்டமே அல்ல
என்று பெரு நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கான ஆணையம் கூறியது. மார்ச் 25ம் தேதி கடைபிடிக்கப்படும்
கருவில் வளரும் குழந்தை தினத்தை முன்னிட்டு அந்த ஆணையம் வெளியிட்ட செய்தியில், உண்மையை
எதிர்க்கும் அறிவற்ற மனங்களே கருவில் வளரும் குழந்தையின் மனித இயல்பை ஏற்கத் தவறும் என்று
கூறப்பட்டுள்ளது. இந்த உலகில் இன்னும் பிறக்காத குழந்தையின் வாழ்வு, தாயைப் போல முக்கியமானது
அல்ல என்ற கருத்தை இந்த ஆணையம் மறுத்துள்ளது.