2011-02-23 16:47:25

கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளன - கர்நாடகா முன்னாள் நீதிபதி


பிப்.23,2011. 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மாநில அரசின் ஆதரவுடன் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன என்று கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் கூறினார்.
மக்கள் மன்ற விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று மும்பையில் வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி Michael Saldhana இவ்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
அண்மையில் வெளியிடப்பட்ட B.K.Somashekhara குழுவின் அறிக்கையில் பல அப்பட்டமான தவறுகள் இருப்பதாகவும், இவ்வறிக்கை வெறும் கண்துடைப்பு என்றும் கூறிய நீதிபதி Saldhana தனது அறிக்கையின் ஒரு பிரதியை இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Oswald Gracias இடம் அளித்தார்.
Somashekhara அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பல்வேறு மதங்களையும் சார்ந்த மக்கள் கர்நாடகாவில் மேற்கொண்ட மாபெரும் பேரணிகள் அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஓர் அடையாளமாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறிய கர்தினால் Gracias மத்திய அரசு இவ்வன்முறைகளைக் குறித்து ஒரு CBI விசாரணைக்கு உத்திரவேண்டும் என்ற ஆயர்களின் வேண்டுகோளை தானும் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.