மத்தியக்கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் குறித்த அக்கறையை வெளியிட்டுள்ளனர் இஸ்லோவாக்
ஆயர்கள்.
பிப்.22, 2011. தங்கள் விசுவாசத்திற்காக அநீதியான முறையில் துன்பங்களை அனுபவித்து வரும்
மத்தியக்கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்த தன் ஆழ்ந்த அக்கறையை
வெளியிட்டுள்ளது இஸ்லோவாக் ஆயர் பேரவை.
உலகின் எப்பகுதியிலும் மத விடுதலையையும்
மனச்சான்றின் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டியது அவசியம் எனக்கூறும் ஆயர்கள், கிறிஸ்தவர்களைச்
சித்ரவதைகளிலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஐக்கிய அவை ஆராய்ந்து
ஆவன மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
தங்கள் விசுவாசத்திற்காக
துன்புறும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது குறித்த ஐரோப்பிய ஐக்கிய அவையின் தெளிவான அறிக்கை
விரைவில் வெளியிடப்படுவது, ஐரோப்பிய ஐக்கிய அவைக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே தற்போது
இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் கனியாக இருக்கும் எனவும் இஸ்லோவாக் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.