2011-02-22 15:46:08

பங்களாதேசில் கிறிஸ்தவ பழங்குடி கிராமம் தாக்கப்பட்டுள்ளது.


பிப்.22, 2011. பங்களாதேசில் சிட்டகாங் மறைமாவட்டத்தின் கிராமம் ஒன்றைத் தாக்கி, கிறிஸ்தவ பழங்குடியினரை வெளியேற்றியுள்ளனர் இஸ்லாமிய குடியேற்றதாரர்கள்.

Ragipara என்ற கிராமத்தில் குடியேறியுள்ள இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டவர்களுள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் இந்துக்கள் அடங்குவர்.

இக்கிராமத்தில் குடியேறிய 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிமக்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி அம்மக்களை ஊரை விட்டு விரட்டியுள்ளனர். இதனைக் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்ததாக சிறுபான்மை மதத்தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.