தினசரி கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பெண்டிர், மகிழ்ச்சி மனநிலையுடன் வாழ்வதாக
ஆய்வு தெரிவிக்கிறது.
பிப்.22, 2011. தினசரி கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பெண்டிர், தங்கள் வாழ்வின்
துன்ப துயர்களால் அதிகம் பாதிக்கப்படாதவர்களாய், பொதுவாகவே மகிழ்ச்சி மனநிலையுடன் வாழ்வதாக
அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்கப் பெண்களிடையே
கடந்த 36 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பெண்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அவர்கள்
வழிபாட்டுச் சடங்குகளில் பங்குகொள்வதும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.