குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலராக
கேரளா கோழிக்கோடின் ஆயர் நியமனம்.
பிப்.22, 2011. குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி
அவையின் செயலராக கேரளா கோழிக்கோடின் ஆயர் ஜோசப் கலத்திபரம்பிலை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வேராப்பொலி உயர்மறைமாவட்டத்தின் வதுத்தலா என்ற இடத்தில்
1952ம் ஆண்டு பிறந்த ஆயர் கலத்திபரம்பில் உரோம் நகரில் பயின்று முனைவர் பட்டம் பெற்று
2002ம் ஆண்டு கோழிக்கோடின் ஆயராக பொறுப்பேற்றார்.
குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப்
பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் செயலராக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள
ஆயர் கலத்திபரம்பில், 1984 முதல் 89 வரை உரோம் நகரின் தூய பவுல் பாப்பிறை கல்லூரியின்
துணை அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.