முதியோர் மற்றும் நோயாளிகளைப் பேணிவரும் குடும்பங்களுக்கு சமூகம் ஆதரவு வழங்கவேண்டும்.
பிப் 21, 2011. முதியோர் மற்றும் நோயாளி உறவினர்களை அக்கறையுடன் பேணிவரும் குடும்பங்களுக்கு
சமூகம் வழங்கவேண்டிய ஆதரவின் தேவை குறித்து அழைப்பு விடுத்துள்ளார் இங்கிலாந்தின் வெஸ்ட்
மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கொல்ஸ்.
இன்றைய சமூகத்தில் காணப்படும் சில உண்மை
நிலைகள், கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு நேர் எதிராக உள்ளதாக தன் கவலையை வெளியிட்ட பேராயர்,
மருத்துவமனைகளில் முதியோர் ஆதரவின்றி விட்டுச் செல்லப்படுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது
என்பதையும் எடுத்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் காட்டி உதவித்
தேவைப்படுவோர் மீதான அக்கறைகளை அரசுகள் ஒதுக்க முடியாது என்ற பேராயர் நிக்கொல்ஸ், ஒரு
சமூகத்தின் வருங்காலம் என்பது குடும்ப வாழ்வின் தன்மையையும் தரத்தையும் சார்ந்துள்ளது
என மேலும் கூறினார்.