பிப் 19, 2011. துனிசியாவில் பணியாற்றிவந்த போலந்து நாட்டு குரு ஒருவர் அடையாளம் தெரியாத
மனிதர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
துனிசியாவின் மனவ்பா
நகரில் உள்ள சலேசியப் பள்ளியின் சேமிப்பு அறையில் குரு Marek Rybinski யின் கொலையுண்ட
உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சலேசிய தகவல் மையம் அறிவித்தது.
போலந்தில் 2005ம்
ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட 33 வயதாகும் இக்குரு, 2007ம் ஆண்டு முதல் துனிசியாவின்
மனவ்பா நகரில் பணியாற்றி வந்துள்ளார்.
துனிசியாவின் அண்மை பதட்டநிலை காலத்தில்
கொலையுண்டுள்ள இரண்டாவது குரு இவர் ஆவார்.