திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுப்பெற்றவராக அறிவிக்கப்பட உள்ள திருப்பலியில்
பங்கு பெற அனுமதிச்சீட்டு தேவையில்லை.
பிப் 19, 2011. இம்மேமாதம் முதல் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு
பெற்றவராக அறிவிக்கப்பட உள்ள திருப்பலியில் பங்கு கொள்ள விரும்பும் திருப்பயணிகளுக்கு
அனுமதிச்சீட்டு தேவையில்லை என திருப்பீடம் அறிவித்துள்ளது.
வழக்கமாக திருத்தந்தை
நிறைவேற்றும் திருச்சடங்குகளில் பங்குகொள்ள விரும்புபவர்களுக்கு திருப்பீடத்தின் அனுமதிச்சீட்டு
இலவசமாக வழங்கப்படுகின்றபோதிலும் சில வெளி நிறுவனங்கள் இவ்வனுமதிச்சீட்டைப்பெறுவதற்கும்
பணம் வசூலித்து வருவதை தடுக்கும் விதமாக, இந்த முத்திப்பேறு திருப்பலிக்கு அனுமதிச்சீட்டு
தேவையில்லை என திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தையின் எந்த ஒரு திருப்பலிக்கோ
திருச்சடங்கு நிறைவேற்றும் நிகழ்வுக்கோ அனுமதிச்சீட்டு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்றும்,
எவரும் இதற்காக பணம் வசூலிக்க அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே,
திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பெயரில் சில விஷமிகள் மின்னஞ்சல் மூலமாகவும் இணையதளங்கள்
மூலமாகவும் நிதி திரட்ட முயன்று வருவது ஓர் ஏமாற்று வேலை என எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலியாவிற்கான
திருப்பீடத்தூதுவர் பேராயர் Giuseppe Lazzaratto.