2011-02-18 15:27:18

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சார்ந்த குரு அமலன் கொலை


பிப்.18,2011. தமிழ் நாட்டின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சார்ந்த குரு ஒருவரின் இறந்த உடல் இப்புதனன்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரது அடக்கச் சடங்குகள் இவ்வியாழன் நிறைவேறின.
பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் குடும்பநலப் பணிக்குழுவின் செயலரான அருள்தந்தை அமலனின் உயிரற்ற உடலை இப்புதனன்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அருள்தந்தை அமலன் ஓர் எளிமையான, நேர்மையான மனிதர் என்றும், அவர் இவ்விதம் மரணமடைந்திருப்பது பெரும் வேதனையைத் தருகிறதென்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூட் பால்ராஜ் கூறினார்.பணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர் என்றும் தந்தையின் மரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மறைமாவட்டத்தின் குருகுல முதல்வர் அருள்தந்தை அன்டனிசாமி UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.