2011-02-15 14:54:13

கருக்கலைப்பு, ஒரே பாலினத்திருமணங்கள் மற்றும் போதை மருந்து பயன்பாட்டு அனுமதிக்கு பெரு நாட்டு மக்கள் எதிர்ப்பு.


பிப் 15, 2011. பெரு நாட்டில் கருக்கலைப்பு, ஒரே பாலினத்திருமணங்கள் மற்றும் போதை மருந்து பயன்பாட்டு அனுமதி ஆகியவைகளுக்கு அந்நாட்டின் மக்களுள் மூன்றில் இரு பகுதிக்கு மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அண்மையில் அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட இவ்வாய்வின் மூலம் பெரு நாட்டு மக்கள் ஒழுக்கரீதி மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதற்கு எதிரான கொள்கைகளை எதிர்க்கத் துணிவதாகவும் தெரிவதாக லீமா உயர்மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பெரு நாட்டு மக்களுள் 92 விழுக்காட்டினர் போதைபொருள் பயன்பாட்டைச் சட்டபூர்வமாக அனுமதிப்பதை எதிர்ப்பதாகவும், 76.3 விழுக்காட்டினர் கருக்கலைப்பையும், 74 விழுக்காட்டினர் ஒரேபாலினத் திருமணங்களையும் எதிர்ப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.