அதிவேகக் கார் பந்தயத்தில் விபத்திற்குள்ளான போலந்து நாட்டு வீரருக்கு இறையடியார் இரண்டாம்
ஜான் பாலின் புனிதப் பண்டம்
பிப்.14,2011. Formula One என்று வழங்கப்படும் அதிவேகக் கார் பந்தயத்தில் கடந்த வாரம்
பெரும் விபத்திற்குள்ளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள போலந்து நாட்டு வீரர் Robert
Kubica கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் புனிதப்
பண்டம் ஒன்று அவருக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
கார் பந்தய வீரர் Kubica திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் மீது அதிகப் பற்றும் பக்தியும் கொண்டவர். எனவே, அவரது பெயரைக் கார்
பந்தயத்தில் தான் அணிந்துள்ள தலைக் கவசத்தில் எப்போதும் பொறித்திருப்பார்.
இந்த
விபத்தின் காயங்களிலிருந்து தான் குணமடைய இரண்டாம் ஜான் பால் தனக்கு உதவிகள் செய்வதற்கு
அவரது திருப்பண்டம் தனக்குத் தேவையென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இறையடியார்
இரண்டாம் ஜான் பால் திருத்தந்தையாய் இருந்தபோது அணிந்திருந்த அவரது ஆடையின் ஒரு பகுதியும்,
அவரது இரத்தத்தின் ஒரு துளியும் Robert Kubica விற்கு Krakow உய்ரமறைமாவட்டப் பேராயர்
கர்தினால் Stanislaw Dziwisz அவர்களால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.